RETamil News
சென்னையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத காய்கறி,இறைச்சி மற்றும் மளிகை கடைகளுக்கு சீல் வைக்கப்படும்; மாநகராட்சி எச்சரிக்கை

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. அதில் முதல் நடவடிக்கையாக ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.
இரண்டாவதாக சமூக இடைவெளியை கடைபிடிக்க பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது சென்னையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத அனைத்து காய்கறி,இறைச்சி மற்றும் மளிகை கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு சீல் வைக்கப்படும் கடைகள்
அடுத்த 3 மாதம் இயங்க அனுமதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.















