GeneralRETamil NewsTrending Nowஉலகம்
45 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா..! அமெரிக்காவில் சோகம்!
45000 new corona cases registered in USA
வாஷிங்டன்:
அமெரிக்காவில் புதிதாக 44,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் உலுக்கி வருகிறது. 6 மாதங்களை கடந்து இருந்தாலும் தொற்று ஓயவில்லை.
உலக நாடுகளை கவலை கொள்ள வைத்துள்ள கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த வல்லரசு நாடான அமெரிக்காவே திண்டாடி வருகிறது. அமெரிக்காவில் புதிதாக 44,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்நாட்டில் இதுவரை 2,681,775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு 128,777- பேர் பலியாகியுள்ளனர். உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்காதான் முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 13 லட்சம் பாதிப்புடன் பிரேசில் 2ம் இடம் வகிக்கிறது.