RETamil News
2014- க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு , 3% ஊதிய உயர்வு!

2014- க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு , 3% ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை செயலாளர் சொர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது;
அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற மறுநாள் ஊதிய உயர்வுக்கான நாளாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சம்பளத்தில் 3 சதவீத உயர்வை வழங்கலாம் என்று 2014-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
2014 டிசம்பர் 31-ஆம் தேதி முதல் இந்த சலுகை அமலுக்கு வருவதாக கூறப்பட்டிருந்தது.
தற்போது இந்த சலுகை 2014- க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சலுகையை மாநிலம் முழுவதும் உள்ள ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.