RETamil NewsTrending Nowஉலகம்
பிரேசிலில் 10 லட்சம் பேரை கடந்த கொரோனா பாதிப்பு..! அசால்ட்டாக பேசும் அதிபர்!
10 lakh corona cases in Brazil
ரியோடி ஜெனிரோ:
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பிரேசிலில் 10 லட்சத்தை கடந்துவிட்டது.
தற்போதைய நிலவரத்தின்படி, பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,32,913ஆக உள்ளது. தொற்று பாதிப்பு உச்ச நிலையை விரைவில் அடையும் என்று சுகாதார வல்லுநர்கள் கூறி உள்ளனர்.
ஏழை மற்றும் பூர்வகுடி மக்களே இந்த தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கொரோனா பரவல் தீவிரமடைய அதை பற்றி கவலைப்படாமல் உள்ளார் அந்த நாட்டின் அதிபரான போல்சனாரோவோ.
இது தொடர்பாக பேசிய அவர், தான் உள்பட பெரும்பாலானவர்களுக்கு கொரோனா வைரஸால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறி வருகிறார். கொரோனா தொற்றை கையாள்வதில் ஆபத்தை உணராமல் இருப்பதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.