fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

129 பேருக்கு ஒரே நாளில் கொரோனா..! வேலூரில் அதிகரிக்கும் பாதிப்பு!

Vellore corona cases

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சப்பட்ச வேகத்தில் பரவி வருகிறது.  சென்னையில் மட்டும் காணப்பட்ட கொரோனா தொற்று இப்போது மற்ற மாவட்டங்களிலும் வேகமாக பரவி இருக்கிறது.

குறிப்பாக, வட மாவட்டங்களில் அதிகளவு காணப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் மருத்துவர் உள்பட 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,200க்கு மேல் உயர்ந்தது. இந் நிலையில் தற்போதைய நிலவரப்படி மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

ஆகையால் அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,378ஆக உயர்ந்து உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்புகளை கண்டு, மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் களம் இறங்கி இருக்கிறது.

தொற்று கண்டறியப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அவர்கள் தொடர்பில் இருந்தவர்களும் படிப்படியாக கண்டறியப்பட்டு வருகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close