fbpx
GeneralRETamil Newsதமிழ்நாடு

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 166 பேருக்கு கொரோனா…!

Vellore corona cases 166 in oneday

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 166 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

உலகின் பல நாடுகளுக்குக் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் நேற்று 4,150 பேருக்கு ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 4வது முறையாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்பது 4 ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது.

இதனால் தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 151 என உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 68 ஆயிரத்து 254 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு என்பது அதிகமாக இருந்து வருகின்றது. நேற்று மாலை முதல் இன்று காலை வரை 166 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close