GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு
தூக்கியடிக்கப்பட்ட தூத்துக்குடி எஸ்பி…! ஜெயக்குமார் புதிய எஸ்பியாக நியமனம்!
Tuticorin sp transferred
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் மாற்றம் செய்யப்பட்டு புதிய கண்காணிப்பாளராக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். சாத்தான்குளம் இரட்டை மரணத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் ஜெயக்குமார் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஆக இருந்தவர். தென் மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, தென்மண்டல ஐ.ஜி. ஆக முருகன் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.