தமிழக அரசுக்கு நன்றி..! தெலுங்கானா ஆளுநர் தமிழிசை டுவிட்!
Telangana governor say thanks to tamilnadu
ஐதராபாத்:
ஊரடங்கின் போது, தமிழகத்தில் சிக்கிக்கொண்ட தெலுங்கானா மக்கள் ஊர் திரும்ப உதவிய தமிழக அரசுக்கு தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக மாநில எல்லைகள் மூடப்பட்டன.
அப்போது வெளி மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றவர்கள் அங்கேயே சிக்கிக் கொண்டனர். தெலுங்கானாவிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்த பயணிகள் சிலர் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல முடியாமல் தமிழகத்தின் நாங்குநேரி பகுதியில் சிக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து தகவல் தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்களை உடனடியாக தெலுங்கானா அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக அரசிடம் வலியுறுத்தினார். அதன்படி நடவடிக்கை எடுத்த தமிழக அரசு பயணிகள் மீண்டும் தெலுங்கானா திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்தது.
இதுகுறித்து ட்விட்டர் மூலமாக நன்றி தெரிவித்துள்ள தெலுங்கானா ஆளுனர் “தெலுங்கானா கவர்னர் அவர்களின் கோரிக்கையை ஏற்று தெலுங்கானா மக்களுக்கு உதவிய தமிழக அரசுக்கு நன்றி…” என்று கூறி உள்ளார்.