fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி…! 2 தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு, 2 பேர் பலி!

Terrorist intrusion in Jammu Kashmir

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

வான்போரா பகுதியில் தீவிரவாதிகள்  பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் ஆகியவற்றின் கூட்டுக் குழு அங்கு சென்றது.

அப்போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. சந்தேகத்திற்கிடமான இடத்தை நோக்கி படைகளின் கூட்டுக் குழு நெருங்கிய போது, அப்பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பாதுகாப்பு படையினரும் பதிலடி தந்தனர். சிறிது நேரம் நீடித்த இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close