fbpx
Others

சிலம்ப விளையாட்டு வளர்ச்சி வாரியம் அமைக்க கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம்

உலக சிலம்ப ஆசான் கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி  சிலம்ப விளையாட்டு வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும்,அரசு பள்ளி,மாநகராட்சி பள்ளி,தனியார் பள்ளி உட்பட அனைத்து பள்ளிகளிலும் சிலம்பம் பயிற்சி அளிக்க வேண்டும்,சிறந்த மூத்த ஆசான்களுக்கு மாதாந்திர ஊதியமும்,திறமையான ஆசான்களுக்கு தமிழக அரசு சார்பில் சிலம்ப விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை  வலியுறுத்தி கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் ,துணை தலைவர்.அகத்தியா. அ. ஞானம்.இணைசெயலாளர் ராஜா,பொருளாளர் ராஜவேலு, துணை செயலாளர்கள் விஜயன்,அருண் கேசவன் முன்னிலையில் நடைபெற்றது..முன்னதாக சங்கத்தின் செயலாளர் ஆர். முருககனி அனைவரையும் வரவேற்று பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக எஸ்.வி.எஸ். குருப்பின் நிறுவனர். டாக்டர். சி.எம்.சாமி கலந்துகொண்டார். சிலம்ப ஆசான்கள் கிருஷ்ணசாமி,சண்முகம் , குரு ஏழுமலை. கண்ணன்.,பவர் பாலா பாலசேகர்,சௌந்தர்,,முகமது அப்துல்காதர், பரசுராமன். விஸ்வநாதன். ராஜன்,சண்முகராஜா,சரவணன்,வில்சன்.ரிஷ்வான் பாட்ஷா மற்றும் ஆசான்கள்.ஆசிரியர்கள்,பயிற்சியாளர்கள்,மாணவ – மாணவிகள்,பெற்றோர்களும் கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close