மு.க. ஸ்டாலின்–குளிர் பதன கிடங்குகளை காணொளி மூலம்திறந்தார்.
அம்பத்தூர் மற்றும் பாடியநல்லூர் பகுதியில் ரூபாய் 30 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட குளிர் பதன கிடங்குகளை காணொளி மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின்திறந்துவைத்தார்.திருவள்ளூர் மாவட்டம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ரூபாய் 10 கோடி மதிப்பில் பாடியநல்லூர் ஊராட்சியில் 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர் பதன கிடங்கு மற்றும் ரூபாய் 20 கோடி மதிப்பில் அம்பத்தூரில் 5000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர் பதன கிடங்குகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர். (விவசாயம்) வேதவள்ளி. வேளாண்மை துணை இயக்குனர். ரவிக்குமார். காஞ்சிபுரம் விற்பனை குழு செயலாளர். சந்திரசேகர் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.கிடங்குகளை மாவட்டத்தில் உள்ள வேளாண் தொழில் முனைவோர். சுய உதவி குழுக்கள் உழவர் உற்பத்தியாளர்கள். குளிர்பதன கிடங்கு உரிமையாளர்கள் வாடகை மூலம் பயன்படுத்தலாம் என துறை அதிகாரிகள் தெரிவித்தனர்