GeneralRETamil NewsTrending Nowஇந்தியா
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலம்…! 120 நாட்களாக நீட்டித்த ரயில்வே நிர்வாகம்!
Special train reservation extended
டெல்லி:
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலத்தை 120 நாட்களாக ரயில்வே நிர்வாகம் நீட்டித்துள்ளது.
சீனாவின் கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பிறப்பிக்கப்பட்ட 4ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிகிறது.
இந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது. அதற்கான அறிவிப்பை நாளை பிரதமர் மோடி வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவுக்கான கால அவகாசத்தை 30 நாட்களில் இருந்து 120 நாட்களாக அதிரித்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 31ம் தேதி காலை முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று தெரிகிறது.