fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம்…! மகன் எஸ்பிபி சரண் தகவல்!

SPB health improving says son saran

சென்னை:

அப்பாவின் உடல்நிலை சில தினங்களுக்கு முன் இருந்ததை விட இப்போது தேறி வருவதாக எஸ்.பி.பி. மகன் சரண் தெரிவித்துள்ளார்.

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதியாகி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன் என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால் 13-ம் தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். எஸ்.பி. பாலசுப்பிரமணியனை மருத்துவர்கள் தீவிர கவனித்து வருகின்றனர். உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது.

அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர திரையுலகினர் மட்டுமின்றி பலரும் தங்களது பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், அவரது மகன் எஸ்.பி.பி சரண் கூறுகையில், எனது தந்தை எஸ்.பி.பி. மெல்ல மெல்ல தேறி வருகிறதாகவும், முன்பு விட தற்போது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என தெரிவித்தார்.

இந் நிலையில் மகன் சரண் பேசிய ஒரு வீடியோ ஒன்று வெளியகியுள்ளது. அதில் அவர், அப்பா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சில தினங்களுக்கு முன்பு இருந்ததை விட எஸ்.பி.பி. சுவாசிப்பதில் சிரமம் குறைந்துள்ளது, கண் விழித்து மருத்துவரிடம் கை சைகை செய்தார் என்று கூறினார். அம்மாவும் குணமாகி வருகிறார்கள் ஓரிரு நாட்களில் நலம் பெறுவார் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close