fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

ரூ.500 கோடி ஒதுக்கீடு…! எல்லையில் ராணுவ தளவாடங்கள் அதிகரிக்க நடவடிக்கை!

RS.500 crore permitted by central government for military

டெல்லி:

எல்லையில் தேவையான ராணுவ தளவாடங்களை ஏற்படுத்திக் கொள்ள சிறப்பு நிதியாக ரூ.500 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா – இந்திய ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பிலும் உயிர்பலிகள் ஏற்பட்டன.

இந்திய ராணுவம் மீது சீனா அத்துமீறி தாக்கியதற்கு இந்தியா முழுவதும் மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கவும், சீன படைகளுக்கு பதிலடி தரவும்  ராணுவத்திற்கு முழு அதிகாரம் தரப்பட்டுள்ளது.

எல்லையில் தேவையான ராணுவ தளவாடங்களை ஏற்படுத்திக் கொள்ள  சிறப்பு நிதியாக ரூ.500 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதனால் சீனா மீண்டும் ஊடுருவினால் தக்க பதிலடி கிடைக்கும் என்று தெரிகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close