fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

இன்று இந்தியா வரும் ரபேல் போர் விமானங்கள்…! அம்பாலா விமான நிலைய பகுதிகளில் 144 உத்தரவு!

Rafale flight coming today in india

சண்டிகர்:

பிரான்சில் இருந்து ரபேல் விமானம் இன்று இந்தியா வருவதால் அம்பாலா விமான நிலையத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பிரான்ஸ் ஒப்படைத்துள்ள ரபேல் போர் விமானங்கள், பிரான்சில் இருந்து புறப்பட்டு இருக்கின்றன. மொத்தம், 7,000 கிமீ துாரத்தை கடந்து, நாளை இந்தியா வந்து சேருகின்றன.

வரும் வழியில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள பிரான்ஸ் விமானப்படை தளத்தில் மட்டும் நிறுத்தப்பட்டன. ஹரியானா மாநிலம், அம்பாலா விமானப்படை தளத்தில், ரபேல் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

அங்கு, இந்த விமானங்கள், நம் படையுடன் இணைகின்றன. இந்நிலையில், ரபேல் விமானம் இன்று தரையிறங்குவதால், அம்பாலா விமான நிலையத்தை சுற்றி உள்ள 4 கிராமங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் தரையிறங்கும் போது புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 கிமீ சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close