fbpx
RETamil NewsTechnologyஅரசியல்இந்தியா

இன்றிரவு அடுத்தக்கட்ட ஊரடங்கை அறிவிக்கிறாரா பிரதமர் மோடி? 8 மணிக்கு பேச்சு

PM Modi address the nation today at 8pm

டெல்லி: 3வது முறையாக இன்று நாட்டு மக்களுடன் உரையாற்றவுள்ளார் பிரதமர் மோடி.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி முழு ஊரடங்கு அமலானது. முதலில் 21 நாட்கள், அடுத்து 19 நாட்கள், கடைசியாக 14 நாட்கள் என 3 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கால் அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட, நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 3ம் கட்ட ஊரடங்கு வரும் 17ம் தேதியுடன் முடிகிறது.

ஒவ்வொரு முறையும் ஊரடங்கு முடிவதற்கு முன்பாக, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துக்களை கேட்டறிகிறார். அதன்படி அவர் நேற்று கருத்துகளை கேட்டறிந்தார்.

இந்நிலையில், 3வது முறையாக இன்று நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளார். இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி என்ன பேசுவார்? என்று நாட்டு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close