fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்…! 2 பேர் பலி..! தேடுதல் வேட்டை தீவிரம்!

Pakistan Terrorist attack in jammu Kashmir

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சிஆர்பிஎப் வீரர் ஒருவரும், தீவிரவாதி ஒருவரும் பலியாகி உள்ளனர்.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ளது. இந்த  சூழலை பயன்படுத்தி ஜம்மு காஷ்மீரில் 2 மாதங்களாக ஊடுருவல் சம்பவங்களில் தீவிரவாதிகள் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில் பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்களின் ரோந்து வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஒரு வீரர் வீர மரணம் அடைந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அதே பகுதியில் கார் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் காரில் இருந்த ஒருவர் பலியானார்.

சிஆர்பிஎப் வீரர்கள் பதிலடியால் தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close