ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்…! 2 பேர் பலி..! தேடுதல் வேட்டை தீவிரம்!
Pakistan Terrorist attack in jammu Kashmir
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சிஆர்பிஎப் வீரர் ஒருவரும், தீவிரவாதி ஒருவரும் பலியாகி உள்ளனர்.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி ஜம்மு காஷ்மீரில் 2 மாதங்களாக ஊடுருவல் சம்பவங்களில் தீவிரவாதிகள் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில் பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்களின் ரோந்து வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஒரு வீரர் வீர மரணம் அடைந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அதே பகுதியில் கார் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் காரில் இருந்த ஒருவர் பலியானார்.
சிஆர்பிஎப் வீரர்கள் பதிலடியால் தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.