GeneralRETamil Newsஅரசியல்இந்தியா
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் மீண்டும் அத்துமீறல்…! இந்தியா பதிலடி!
Pak intrusion in jammu Kashmir
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்தும் செயலை பாகிஸ்தான் இன்னும் நிறுத்தவில்லை. ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானின் இத்தகைய அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
இந் நிலையில், பூன்ச் மாவட்டத்தில் உள்ள மெந்த்ஹர் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.
அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய இந்த மோதல் சுமார் 45 நிமிடம் வரை நீடித்ததாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லையில் தாக்குதலை தொடர்ந்து ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.