மும்பையில் 24 மணிநேரத்தில் 1,010 பேருக்கு கொரோனா தொற்று…! 47 பேர் உயிரிழப்பு!
Mumbai corona cases 1010 in last 24 hours
மும்பை:
மும்பையில் 24 மணிநேரத்தில் 1,010 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
மும்பையில் ஓரே நாளில் 1,010 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,28,726 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் அங்கு ஒரே நாளில் 719 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,03,468 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பை பொருத்தளவில், 47 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,130ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 17,828 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைககம் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதார நடவடிக்கைகள் முழு வீச்சில் எடுக்கப்பட்டு வருகின்றன.