மகாராஷ்டிராவில் மேலும் 9,431 பேருக்கு கொரோனா உறுதி…! அதிகரிக்கும் பாதிப்பு!
Maharashtra corona cases 9431
மும்பை:
மகாராஷ்டிராவில் மேலும் 9,431 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மகாராஷ்டிராவில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது. நேற்று முன் தினம் 9,251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று மேலும் 9,431 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,75,799 ஆக அதிகரித்துள்ளது. 1,20,480 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மேலும் 267 பேர் மரணமடைந்துள்ள நிலையில், 11,854 பேர் கொரோனா தொற்றால் மொத்தமாக மரணமடைந்துள்ளனர்.