fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

9 நாட்கள் கடந்தும் போகாத கொரோனா…! மருத்துவமனையில் முதலமைச்சர்!

Madhya Pradesh CM corona tests positive again

போபால்:

மீண்டும் கொரோனா உறுதியானதால் மத்திய பிரதேச முதலமைச்சருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மத்தியபிரதேச முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த மாதம் 25-ந்தேதி உறுதியானது. இதனையடுத்து அவர் போபாலில் உள்ள சிரயு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் இருந்தவாறே அவர் அமைச்சரவை கூட்டத்தை காணொலி காட்சி மூலமாக சமீபத்தில் நடத்தினார்.

இந் நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டு 9 நாட்கள் நிறைவடைந்த நிலையில், அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close