GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா
9 நாட்கள் கடந்தும் போகாத கொரோனா…! மருத்துவமனையில் முதலமைச்சர்!
Madhya Pradesh CM corona tests positive again
போபால்:
மீண்டும் கொரோனா உறுதியானதால் மத்திய பிரதேச முதலமைச்சருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மத்தியபிரதேச முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த மாதம் 25-ந்தேதி உறுதியானது. இதனையடுத்து அவர் போபாலில் உள்ள சிரயு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் இருந்தவாறே அவர் அமைச்சரவை கூட்டத்தை காணொலி காட்சி மூலமாக சமீபத்தில் நடத்தினார்.
இந் நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டு 9 நாட்கள் நிறைவடைந்த நிலையில், அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.