fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

ஓபன் தி பாட்டில்…! புதுச்சேரியிலும் திறக்கப்பட்ட மதுக்கடைகள்…!

Liquor shops opened in puduchery

புதுச்சேரி:

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே புதுச்சேரியில் இன்று மதுவிற்பனை தொடங்கி இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த வாரம் டாஸ்மாக் கடைகள் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் திறக்கப்பட்டது. புதுச்சேரியிலும் கடந்த வாரமே மதுக்கடைகள் திறக்கப்பட இருந்தது. ஆனால் அது தள்ளி வைக்கப்பட்டது.

இந் நிலையில் புதுச்சேரியில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி காலை 10.30 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டன.

அறிவித்தப்படி அனைத்து மதுக்கடைகளும் திறக்கப்பட்டன. மதுவை வாங்குவதற்காக மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் கிட்டத்தட்ட தமிழகம் போன்று இங்கும் மது பானங்கள் விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close