கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா…! மருத்துவமனையில் அட்மிட்!
Karnataka chief minister ediyurrappa corona positive
பெங்களூரு:
கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ,தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள முதல்வர் எடியூரப்பா தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தனக்கு உடல் நிலை சீராக உள்ளதாக கூறி உள்ளார்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி தற்பொழுது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருதாகவும் ட்வீட் செய்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.