லடாக் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு தரும் ஜப்பான்…!
Japan supports india over ladakh issue
டெல்லி:
லடாக்கில் நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்போம் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான ஜப்பான் துாதர், சடோஷி சுசூகி, டுவிட்டர் சமூக வலைதளத்தில் லடாக்கில், சீனா அத்துமீறி நடத்திய தாக்குதல் பற்றி, கூறியிருப்பதாவது:
லடாக்கில், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை, ஜப்பான் கடுமையாக எதிர்க்கும். எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, ஜப்பான் முழுமையாக ஆதரவு அளிக்கும்.
எல்லை பிரச்னை பற்றி, வெளியுறவு செயலர், ஹர்ஷ் வர்த்தன் ஷ்ரிங்லாவுடன் நடத்திய பேச்சு, திருப்தியாக இருந்தது. தீர்வு காணும் இந்திய முயற்சிகளை, சீனா ஏற்க வேண்டும்.
இந்திய மற்றும் ஜப்பானிய கடலோர காவல் படையைச் சேர்ந்த ரோந்து கப்பல்கள், கடந்த, 27ம் தேதி, இந்திய பெருங்கடலில், இணைந்து பயிற்சியில் ஈடுபட்டது மகிழ்ச்சிஅளிக்கிறது என்று கூறியுள்ளார்.