GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா
லடாக் எல்லையில் களம் இறங்கிய இந்தியா..! பீரங்கிகளுடன் பாதுகாப்பு!
India military forces in border
டெல்லி:
லடாக் எல்லையில் சக்திவாய்ந்த பீஷ்மா பீரங்கிகளை இந்திய ராணுவம் நிறுத்தியுள்ளது.
லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் சீன – இந்திய படைகளிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இந்தியா, சீனா இடையே போர் பதற்றம் மூண்டது. இந்த பிரச்னையை தீர்வு காண இரு தரப்பிலும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.
அதன்பின்னர் இரு நாட்டு வீரர்களும் பின் வாங்கினர். ஆனால் இப்போது சீனா மீண்டும் படைகளை குவிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் சீன படைக்குவிப்புக்கு எதிராக இந்தியா தனது சக்தி வாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை எல்லையில் நிறுத்தியுள்ளது.