இந்தியாவில் கடும் உச்சத்தை நோக்கி கொரோனா..! 10 ஆயிரத்தை நெருங்கும் பலி…!
India corona causality nearing 10000
டெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 343,026 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந் நிலையில் இன்றைய தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 343,026 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் 10,243 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தொடுகிறது. அதாவது மொத்தம் 9,915 பேர் கொரோனா காரணமாக இதுவரை பலியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 1,07,958 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு 44,661 பேர், டெல்லியில் 41,182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.