இந்தியாவில் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி…! பாதிப்பு ஒன்னரை லட்சத்தை நெருங்குகிறது!
India corona cases nearing 1.50 lakhs
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,45, 380 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 4,167ஐ எட்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,536 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. 146 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,38, 845 ல் இருந்து 1,45, 380 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,021 ல் இருந்து 4,167 ஆக உயர்ந்துள்ளது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 57,721 ல் இருந்து 60, 491 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் 80, 722 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 மணி நேரத்தில் மட்டும், 6,535 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்தமாக 146 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து 5வது நாளாக கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது, பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.