தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் – 3
காஷ்மீரி சிகப்பு மிளகாய் – 3-4
கொத்தமல்லி விதைகள் – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு – 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கிராம்பு – 3-4
பூண்டு – 5-6 பல்
இஞ்சி – 1 இன்ச்
புளிக்கரைசல் – 2 டேபிள்ஸ்பூன்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
பன்னீர் – 400 கிராம்
வெங்காயம் – 1/4 கப்
நெய் – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
சர்க்கரை /வெள்ளம் – தேவைக்கேற்ப (தேவைப்பட்டால் மட்டுமே)
செய்முறை:
1. முதலில் வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய் மற்றும் காஷ்மீரி சிகப்பு மிளகாய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்கு வறுத்து தனியே வைக்கவும்.
2. பின் கொத்தமல்லி விதைகள், சீரகம், மிளகு, சோம்பு, வெந்தயம், கிராம்பு ஆகியவற்றை நன்கு வறுக்கவும்.
3. வறுத்து வைத்துள்ள மிளகாய் மற்றும் மசாலா பொருட்களுடன் புளிக்கரைசல், இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.
4. இப்பொழுது வாணலியில் டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து அதில் சிறு சிறு துண்டுகளாக வெட்டிய பன்னீரை பொன்னிறமாக பொரித்து தனியே எடுத்து வைக்கவும்.
5. மீதமுள்ள நெய்யில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியவுடன் அரைத்துவைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்.
6. மூன்று நிமிடம் மசாலாவை வதங்கவைத்து அதனுடன் தயிர் சேர்த்து மீண்டும் இரண்டு-மூன்று நிமிடம் வதக்கவும்.
7. இப்பொழுது தேவையான அளவு உப்பு, தேவைப்பட்டால் சிறிது சர்க்கரை அல்லது வெள்ளம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
8. கடைசியாக இந்த மசாலா கலவையுடன் பொறித்த பன்னீரை சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கவும்.
சுவையான பன்னீர் கீ ரோஸ்ட் தயார். சூடாக இதை பரிமாறவும்.
குறிப்பு:மிகவும் ருசியான இந்த பன்னீர் நெய் ரோஸ்டை இட்லி,தோசை,நீர்தோசை,சப்பாத்தி,நான் என எதனுடவும் சேர்த்து சாப்பிடலாம்.