fbpx
GeneralRETamil Newsஉலகம்

வங்கதேசத்தில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து…! 5 பேர் உடல்கருகி பலி!

Fire accident in Bangladesh hospital leas 6 dead

டாக்கா:

வங்கதேசத்தில் மருத்துவமனை ஒன்றின் கொரோனா பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெண் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.

டாக்கா நகரில் குல்ஷான் சந்தை பகுதியையடுத்து அமைந்த மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு என தரை தளத்தில் தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 10 மணியளவில் இந்த பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றனர்.  தொடர்ந்து அவர்கள் மீட்பு பணியையும் மேற்கொண்டனர்.  அதில், ஒரு பெண் மற்றும் 4 ஆண் என 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவரவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.  ஏ.சி. வெடித்து அடுத்தடுத்து தீ பரவியதில் 5 பேரும் பலியாகி உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தீ விபத்தில் பலியானவர்கள் கொரோனா பாதித்த நபர்களா அல்லது வேறு நபர்களா என்பது பற்றி உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளிவரவில்லை.  தீயை அணைக்க போதிய வசதிகள் அந்த பிரிவில் இல்லை என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். தீ விபத்து  பற்றிய விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close