fbpx
RETamil Newsஅரசியல்

ஒருவழியாக கைது நாடகம் முடிவுக்கு வருகிறது!!.எஸ்.வி.சேகர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார்!!!

சென்னை: போலீஸ் தேடி வரும் எஸ்.வி.சேகர் இன்று சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது பிரச்சனை ஆனது. இதில் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார்.

இதனால் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. உடனே சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார்.ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கவில்லை. அவர் உச்ச நீதிமன்றத்திலும்  மேல்முறையீடு செய்து ஜாமீன் கேட்டார்.

உச்ச நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.அத்துடன் அவரை கைது செய்யலாம் எனவும்  கூறியது. ஆனால் தமிழக போலீஸ் இன்னும் அவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்து வருகிறது.

அவர் சந்தோசமாக போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் சுற்றி வருகிறார். இந்த நிலையில் பல வழக்குகளில், அவர் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் ஆஜராகும்படி சேகருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எஸ்.வி.சேகர் இன்று சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் அவர் இன்று ஆஜராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Related Articles

Back to top button
Close
Close