fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

எய்ம்ஸ் மருத்துவமனையில் இளம் மருத்துவர் தற்கொலை…! மன அழுத்தம் காரணமா…?

Delhi AIIMS doctor suicide

டெல்லி:

எய்ம்ஸ் மருத்துவமனையில் இளம் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையில் டெல்லி 2ம் இடத்தை பிடித்துள்ளது. இதன்காரணமாக பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் முயற்சியில் மருத்துவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

அதன் காரணமாக டாக்டர்கள் மன அழுத்தத்துடன் பணி புரிந்து வருவதாக பல்வேறு தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது. இந் நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் அனுராக்குமார் (25). இளம் வயது மருத்துவரான இவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள விடுதியில் தங்கி  பணிபுரிந்து வருகிறார்.

மொத்தம் 18 மாடிகொண்ட விடுதியில் அவர் 10 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது செல்போன் விடுதியின் மாடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விசாரணையில் அவர் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

டாக்டரின் தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்ட 2வது சம்பவம் இதுவாகும்.

Tags

Related Articles

Back to top button
Close
Close