fbpx
GeneralRETamil Newsஇந்தியா

தலைநகர் டெல்லியில் 500 பேருக்கு கொரோனா..! பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,500 ஆக உயர்வு

500 corona cases in delhi today

டெல்லி: டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தலைநகர் டெல்லியையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 500 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,500 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து 4,750 பேர் குணமடைந்துள்ள நிலையில்,  166 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில், டெல்லி 4ம் இடத்தில் உள்ளது.

பட்டியலில்  35058 கொரோனா பாதிப்புடன் மராட்டியம் முதல் இடம் வகிக்கிறது. 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. 3வது இடத்தில் குஜராத் உள்ளது. அந்த குஜராத்தில் 11,745 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close