fbpx
GeneralRETamil NewsTrending Now

இன்று 2ம் கட்டமாக மருத்துவக்குழுவுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை…! வெளியாகும் அறிவிப்பு!

Chief minister edapaddi palanisamy discussion

சென்னை:

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக 2ம் கட்டமாக இன்று மீண்டும் மருத்துவர் குழுவை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனாவால் மார்ச்சில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. ஆனாலும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்கிறது.

தினமும் 800 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மருத்துவர் குழுவை சந்தித்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

அப்போது தமிழகம் முழுவதும் கொரோனா முழுவதும் கட்டுக்குள் வரும் வரை பொதுப்போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது என மருத்துவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் இன்று மீண்டும் 2வது முறையாக வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக மருத்துவர் குழுவை முதலமைச்சர் சந்திக்கிறார்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close