ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
சென்னையில் 2 வாரங்களில் கொரோனா குறையும்…! ஆணையர் பிரகாஷ் நம்பிக்கை
Chennai Ccoroporation commissioner prakash interview

சென்னை:
2 வாரங்களில் கொரோனா தொற்றுகள் குறையம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னையில் மக்கள் தொகை அதிகம். அதுதான் கொரோனா அதிகம் பரவ காரணம்.

கொரோனா பாதிப்பு குறித்து சென்னையில் 2 வாரங்களில் நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் புதியதாக தொற்றுகள் இல்லை.
விலக்குள் அதிகரிக்கும் போது நோய் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து வியூகம் வகுக்கப்படுகிறது. ஒரு பகுதியில் தொடர்ந்து 14 நாட்கள் புதிய தொற்று இல்லையென்றால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.















