ChennaiGeneralRETamil NewsTrending Nowசந்தைதமிழ்நாடு
கொரோனா முழுமுடக்கம் காரணமாக கொத்தவால்சாவடி காய்கறி சந்தை மூடல்…!
Chennai kothawal chavadi market closed
சென்னை:
சென்னையில் கொத்தவால்சாவடி மார்க்கெட் நாளை முதல் மூடப்படுகிறது.
தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று உச்சக்கட்டத்தில் உள்ளது.
அதன் காரணமாக இந்த 4 மாவட்டங்களிலும் நாளை முதல் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
முழு முடக்கம் காரணமாக சென்னை கொத்தவால்சாவடி மார்க்கெட் நாளை முதல் 30ம் தேதி வரை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வரும் 21 மற்றும் 28ம் தேதிகளில் அதாவது அடுத்த வரக்கூடிய 2 ஞாயிற்று கிழமைகளில் திருமழிசை காய்கறி மார்க்கெட் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.