Others
சிறுவாபுரி— 70 ஆண்டுகளுக்கு பின்னர்–அகத்தீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேக விழா
சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோவிலில் நேற்று 3-வது வார கார்த்திகை சோமவாரம் மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு 70 ஆண்டுகளுக்கு பின்னர் 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று காலை முதல் சிறப்பு பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் உள்ளிட்டவை நடைபெற்றது. மதியம் மகா பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு 108 சங்குகளில் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைதொடர்ந்து மூலவருக்கு அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிறுவாபுரி சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.