GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா
மேலும் ஒரு முக்கிய அமைச்சருக்கு கொரோனா..! மனைவிக்கும் பரவியது!
Bihar minister vinod singh got corona
பாட்னா:
பீகார் மாநில அமைச்சர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் முக்கிய நபர்களையும் விட்டு வைக்கவில்லை. தமிழகத்தில் ஏற்கனவே 5 எம்எல்ஏக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந் நிலையில் பீகார் மாநில அமைச்சர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் வினோத் சிங் என்பவர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் அமைச்சரின் மனைவி கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.