GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு
ஜூலை 8ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு என தகவல்…!
Plus 2 exam result on july 8
சென்னை :
ஜூலை 8ம் தேதி பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.
மார்ச்சில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் மொத்தம் 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினர். மார்ச் 24ல் தேர்வு முடிந்தது. பின்னர் ஊரடங்கு அமலானதால் 32 ஆயிரம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.
விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, தற்போது மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தேர்வு முடிவுகள் வெளியிடும் ஆயத்தப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஜூலை 8ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.