fbpx
Others

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆகஸ்ட் மாதத்தில் நிறைவு பெறும். சுகாதாரத் துறை செயலரிடம் டாக்டர். ராதாகிருஷ்ணன் தகவல். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டுமான பணியை அனைத்தும் வருகிற ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு பெறும் என்று ஆய்வுக்குப் பிறகு சுகாதாரத்துறை செயலர் டாக்டர்.ராதாகிருஷ்ணன்கூறினார்..கட்டுமான பணிகள்.திருப்பூரில் ரூ 343.4கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் மருத்துவ கல்லூரிப் பயிலரங்கம் கட்டி முடிக்கப்பட்டு வழி வகுப்புகள் தொடங்கி நடந்து வருகிறது.கட்டுமான பணிகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ள இடம் குறித்து சுகாதாரத்துறை செயலர் டாக்டர். ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.கட்டுமானப் பணிகள் நடக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அவர் ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடத்தின் முன் நின்று செல்போன் புகைப்படம் எடுக்கப்பட்டது உடன் கட்டிடத்தின் பகுதி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. என்று கூறினார். கலெக்டர் வினீத் ஆய்வின்போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசனின், இணை இயக்குனர் ஜெகதீஷ் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்படும் அரசு மருத்துவமனை கலையரங்கம் உள்ளிட்ட அனைத்து கட்டுமானப் பணியும் நிர்ணயிக்கப்பட்ட காலத்தை தாண்டி நடைபெற்று வருகிறது. பொறியாளரிடம் ஆலோசனை நடத்திய பிறகு வருகிற ஆகஸ்ட் மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடித்து ஒப்படைக்கப்பட வேண்டும் என்று சுகாதார செயலர் டாக்டர். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட ரிப்போர்ட்டர் ஞா. ஜெயபாண்டியன்

 

Related Articles

Back to top button
Close
Close