
இனி தான் மோசமான விளைவுகளை சந்திக்க போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார அமைப்பு. கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு உதவுகிறது என குற்றம் சாட்டிய அமெரிக்கா.

உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த நிதி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது அமெரிக்கா. இதற்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா பிரச்சினையை உலக பிரச்சினையாக மாற்ற வேண்டாம். அது தொற்றை மேலும் அதிகரிக்கச் செய்யும் என உலக சுகாதார அமைப்பு இயக்குனர் டிட்ராஸ் தெரிவித்துள்ளார்.
அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியம், ஒன்றாக இணைந்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸ் ஐ பொறுத்தவரை மோசமான நிலை இனி தான் வரப்போகிறது, சந்திக்கப் போகிறோம் என்று தெரிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.
V. NandhiniPrakash















