fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

முதலமைச்சர் அலுவலகத்தில் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி…! இது கர்நாடக நிலைமை!

6 more corona positive cases in Karnataka CM office

பெங்களூரு:

கர்நாடக முதலமைச்சர் அலுவலகத்தில் ஊழியர்கள்  6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு சில நாட்கள் முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் பரிந்துரைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தனது உடல் நிலை சீராக இருப்பதாக எடியூரப்பா தெரிவித்தார்.

முன்னதாக எடியூரப்பா மகள் பத்மாவதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து,  அவர் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் அலுவலகத்தில் ஊழியர்கள்  6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் அடுத்தடுத்து முதலமைச்சர் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு கொரோனா உறுதியாவது அதிர்ச்சியை தந்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close