fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 6.61 லட்சம் கொரோனா பரிசோதனைகள்…! சுகாதாரத்துறை தகவல்!

6.61 lakh corona tests done in india

டெல்லி:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6.61 லட்சம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.  கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மருத்துவ பரிசோதனையில் உள்ள தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வர ஓராண்டு ஆகும் என்பது சுகாதார நிபுணர்கள் கருத்தாக உள்ளது.

தடுப்பூசிகள் இல்லாததால், தற்போது பரவலைக் கட்டுப்படுத்த சோதனை, சிகிச்சை, தொடர்புகளை கண்டறிதல் ஆகியவையே முக்கியம் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. இதன்படி, இந்தியாவிலும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் அதிக அளவு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 10 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது.

இந் நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,61,715 மாதிரிகள் பரிசோதிக்கப்படுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close