GeneralRETamil NewsTrending Nowஅரசியல்உலகம்
அமெரிக்காவில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு…!
50000 cases in America, in single day
வாஷிங்டன்:
அமெரிக்காவில் ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரசால் உலகிலேயே அதிக பாதிப்புகளை சந்தித்த நாடு அமெரிக்கா. அந்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 56 ஆயிரத்தை கடந்தது.
அதனால், மொத்த பாதிப்பு 28,36,875 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 679 பேர் உயிரிழக்க, மொத்த பலி எண்ணிக்கை 1,31,477 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பிலிருந்து இதுவரை 11.91 லட்சம் பேர் மீண்டுள்ளனர்.
15.14 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்காவில் ஒருநாள் பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்துள்ளதால், அந்நாட்டு மக்கள் கலங்கி உள்ளனர்.