GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா
ஒரே நாளில் கொரோனாவுக்கு 50 பேர் பலி…! தலைநகர் டெல்லி நிலைமை!
50 Corona causalities in a single day in delhi
டெல்லி:
தலைநகர் டெல்லியில் கொரோனா தோற்றால் இன்று 50 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,165 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 2,008 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு பாதித்தோரின் எண்ணிக்கை 1,02,831 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, டெல்லியில் 2,129 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 74,217 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 72.17 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,165 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 25,449 பேர் கொரோன தோற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.