GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
செங்கல்பட்டில் ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா..! ஒட்டுமொத்தமாக 824 ஆக உயர்ந்த பாதிப்பு!
45 Corona cases today in chengalpattu
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுதலாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியாகி இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.அதன் ஒரு பகுதியாகதான் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதியானது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்றுவரை 245 பேர் குணமடைந்துள்ளனர். 513 பேர் சிகிச்சையில் இருக்க 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுதலாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை செங்கல்பட்டில் 824 ஆக உயர்ந்துள்ளது.