GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா
20000 பேருக்கு பரவிய தொற்று…! மகாராஷ்டிராவில் ஒன்றரை லட்சம் பேர் பாதிப்பு!
20000 people affected by corona
டெல்லி:
இந்தியாவில் ஒரே நாளில் 19,906 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
200 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவ, பாதிப்புகளும், உயிரிழப்புகளும் இன்னமும் குறையவில்லை. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது.
மகாராஷ்டிராவில் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் 19,906 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 5,28,859 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மகாராஷ்டிரா நோய்த் தொற்றில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது. அங்கு 1,59,133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.