Tamil News
நாடு முழுவதும் கார்டு தோற்றத்தில் வாகன ஆர்.சி. புத்தகம்-மத்திய அரசு அறிவிப்பு!!

ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனகளுக்கான ஆர்.சி. புத்தகம்ஆகியவற்றை காகித வடிவத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த வழிபாட்டை கைவிட்டுவிட்டு நாடு முழுவதும் அவற்றை பிளாஸ்டிக் கார்டு வடிவத்தில் வழங்க மத்திய தரை வழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான புதிய வழிமுறைகளை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இந்த வழிமுறைக்கு முக்கிய காரணம் அந்த முக்கிய ஆவணங்கள் காகிதத்தில் செய்யப்பட்டுள்ளதால் எளிதில் பாதிப்படைந்துவிடுவதால் பல பிரச்சனைகள் நேரிடுகிறது. மேலும் இந்த பிரச்சனைகளை தவிர்க்க அந்த கார்டுகளை தரமாகவும், நீடித்து உழைக்கும்படியாகவும் பி.வி.சி அல்லது பாலி கார்பனேட்டால் அந்தந்த மணிலா அரசுகள் தயாரித்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.















