fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு? ; கலக்கத்தில் ஆளும் கட்சி!!

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆளும் கட்சி தரப்பில் பெரும் பதட்டம் காணப்படுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி, தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர் ஆளுநரிடம் தனித்தனியே கடிதம் அளித்தனர். அதனைத்தொடர்ந்து ஆளுநரிடம் கடிதம் அளித்தவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக தலைமை கொறடா ராஜேந்திரன், கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்திருந்தார்.

அதன்பேரில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களை கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நாளை தீர்ப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தீர்ப்பு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என்றும் கூறப்படுவதால் ஆளும் கட்சி தரப்பில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close