fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 100 பேருக்கு கொரோனா..!

100 more corona cases in vellore

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பில் உள்ளன.

வேலூர் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  2,225 ஆக இருந்தது.

இந் நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,325ஆக உயர்ந்து உள்ளது.

தொடர்ந்து மாவட்டத்தில்  904 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close