ChennaiGeneralRETamil NewsTrending Now
1 கோடி பேர் தான் கொரோனா பரவ காரணம்..! அமைச்சர் ஜெயக்குமார் அடடே! விளக்கம்!
1 crore population behind corona spread says minister jayakumar
சென்னை:
சென்னையில் ஒரு கோடிக்கும் மேல் மக்கள் தொகை இருப்பதே கொரோனாஅதிகரிக்க காரணம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே புதியதாக மீன் பிடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பணிகளை மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது கூறியதாவது:
மக்கள் தொகை அடிப்படையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தளர்வுகள் இல்லை என்றால் மக்கள் இன்னலுக்கு ஆளாக நேரிடும்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1 கோடிக்கும் மேல் மக்கள் தொகை உள்ளது. அதனால் கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சிரமம் என்பதால் மேலும் நோய் தொற்று பரவாமல் இருப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.